‘வானில் பறந்த வண்ணத் தும்பிகள்’ - ஆதரவற்ற பள்ளி மாணவ, மாணவிகளின் கனவை நனவாக்கிய தனியார் தொண்டு நிறுவனம்..!

விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆதரவற்ற பள்ளி மாணவ, மாணவிகளை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்துச் சென்று அவர்களின் கனவை நனவாக்கிய ரெயின் டிராப்ஸ் அமைப்புக்கு குவியும் பாராட்டு.


கோவை: ரெயின் டிராப்ஸ் (Rain Drops) என்ற அமைப்பு பல்வேறு கலை சார்ந்த நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த அமைப்பானது, சமீபத்தில், சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் ஆய்வு ஒன்றை நடத்தினர்.

அப்போது, அங்கு வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பெரும் ஆவலாக இருந்தது தெரியவந்தது. விமானத்தில் பயணிக்க ஆசைப்பட்ட குழந்தைகளின் கனவை நனவாக்க முயற்சிகளை அந்த அமைப்பினர் மேற்கொண்டு வந்தனர்.

இதனையொட்டி சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து “வானமே எல்லை” என்ற திட்டத்தின் மூலமாக மாணவ மாணவிகளுக்காக ஒரு நாள் விமான பயணத்தை ஏற்பாடு செய்தனர்.

இதற்காக சேவாலயா மற்றும் ஆனந்தம் உள்ளிட்ட இல்லங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 26 குழந்தைகள், இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டு மீண்டும் கோவையில் இருந்து சென்னைக்கு ரயிலில் அழைத்து செல்லப்பட்டனர்.



இதில், ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவரும் ஒரு திருநங்கை மாணவியும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.



சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்திறங்கிய மாணவ மாணவியரை கோவை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், வருவாய் பிரிவு அதிகாரி பூமா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

விமானம் மூலம் கோவை வந்த மாணவ மாணவியர், கோவை அறிவியல் மையம், ஜி.டி.நாயுடு அருங்காட்சியகம் என கோவையின் முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.



இந்த விமான பயணத்தை சிறார்கள் வாழ்நாள் முழுவதும் நினைவு கூறத்தக்க வகையில் இயற்கை அறிவியல் ஆய்வாளரும், மாநில திட்டக்குழு உறுப்பினருமான சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், பிரபல பாடகர்களும் சின்னத்திரை நட்சத்திரங்களுமான சிவாங்கி, சாம் விஷால், rain drops அமைப்பின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் குழந்தைகளுடன் பயணித்து மகிழ்ந்தனர்.

இந்த ஏற்பாட்டை செய்த ரெயின் டிராப் (rain drops) அமைப்பின் நல்லெண்ண தூதராக ஆஸ்கார் வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...