கூடலூரில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் கடைகளில் பயங்கர தீ விபத்து - ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின

கூடலூர் - தேவர்சோலை நெடுஞ்சாலையில் உள்ள பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ மளமளவென 2வது மாடிக்கும் பரவியதால் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து தேவர்சோலை செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வணிக வளாகத்தில் உசேன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கடை செயல்பட்டு வருகிறது.



இந்த கடையில் ஏராளமான பழைய பொருட்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது கூறப்படுகிறது. இதனை கண்ட அக்கம் பக்கம் கடைகாரர்கள் உடனடியாக கூடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



இந்நிலையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ மளமளவென 2-வது மாடிக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் இந்த தீ விபத்தானது, மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது சதிச் செயலா என்பது குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...