மோசமான வானிலையால் இன்றும், நாளையும் மேட்டுப்பாளையம் - உதகை இடையே ரயில் சேவைகள் ரத்து

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தண்டவாளங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் இன்றும் நாளையும் மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையே இரு வழித்தடங்களிலும் ரயில் சேவ ரத்து செய்யப்பட்டுள்ளது.



கோவை: நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கல்லாறு - குன்னூர் இடையே நீலகிரி மலை ரயில் பாதையின் சில பகுதிகள் சேற்றால் மூடப்பட்டன.

பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளன. காற்று மற்றும் மழையால் வேரோடு சாய்ந்த மரங்களும் தண்டவாளத்தின் குறுக்கே விழுந்துள்ளன. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இவற்றைக் கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் ரயில் சேவைகள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ரயில் எண்.06136 மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதேபோல் ரயில் எண்.06137 உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் குன்னூர் - உதகமண்டலம் இடையே என்எம்ஆர் ரயில் சேவை திட்டமிட்டபடி இயக்கப்படும்.

மோசமான வானிலை மற்றும் பாதகமான சூழலையும் மீறி சேதமடைந்த ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....