மோசமான வானிலையால் இன்றும், நாளையும் மேட்டுப்பாளையம் - உதகை இடையே ரயில் சேவைகள் ரத்து

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தண்டவாளங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் இன்றும் நாளையும் மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையே இரு வழித்தடங்களிலும் ரயில் சேவ ரத்து செய்யப்பட்டுள்ளது.



கோவை: நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கல்லாறு - குன்னூர் இடையே நீலகிரி மலை ரயில் பாதையின் சில பகுதிகள் சேற்றால் மூடப்பட்டன.

பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளன. காற்று மற்றும் மழையால் வேரோடு சாய்ந்த மரங்களும் தண்டவாளத்தின் குறுக்கே விழுந்துள்ளன. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இவற்றைக் கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் ரயில் சேவைகள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ரயில் எண்.06136 மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதேபோல் ரயில் எண்.06137 உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் குன்னூர் - உதகமண்டலம் இடையே என்எம்ஆர் ரயில் சேவை திட்டமிட்டபடி இயக்கப்படும்.

மோசமான வானிலை மற்றும் பாதகமான சூழலையும் மீறி சேதமடைந்த ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...