கோவை கிணத்துக்கடவு மக்கள் தொடர்பு முகாமில் ரூ.4.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

கிணத்துக்கடவில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.4.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 486 பயனாளிகளுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியர் சமீரன் மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள சொக்கனூரில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கால்நடை துறை,சமூக நலத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.



இதைத்தொடர்ந்து நடைபெற்ற முகாமில் 486 பயனாளிகளுக்கு 4 கோடியை 53 லட்சத்து 64 ஆயிரத்து 985 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



பின்னர் கல் குவாரிகளால் ஏற்படும் பிரச்சனைகள், இலவச வீட்டு மனை பட்டா போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினர்.



இந்த முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட ஊராட்சிகளின் துணை இயக்குனர் கமலக்கண்ணன், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சிக்கந்தர் பாட்ஷா, சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு என்ற திருநாவுக்கரசு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...