தைப்பூசத்தையொட்டி ஜன.15 முதல் பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் - பொள்ளாச்சி எம்.பி கு.சண்முகசுந்தரம்

ரயில்வே சேர்மன் V.K.திரிப்பாத்தியை சந்தித்து உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், தென்னை சார்ந்த பொருட்களை வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்ல பொள்ளாச்சியில் கிசான் ரயில் திட்டம் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரான கு. சண்முக சுந்தரம், ரயில்வே சேர்மன் V.K.திரிப்பாத்தியை நேரில் சந்தித்தார்.

அப்போது, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவை, பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் வலியுறுத்தினார்.

மேலும், உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் விளைகின்ற தேங்காய், இளநீர் அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் தென்னை நார் சார்ந்த பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்த பொருட்களை குறைந்த செலவில் மும்பை, டெல்லி போன்ற வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல உதவும் வகையில், கிசான் ரயில் திட்டத்தை பொள்ளாச்சியில் தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...