சேலம் விருத்தாசலம் வழித்தடத்தில் ஏத்தாப்பூர் ரயில்நிலையத்தில் சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகளால் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை


இன்று (08.02.2017)  சேலம் விருத்தாசலம் வழித்தடத்தில்  பயணிகள் ரயில்களில் (ரயில் எண்.76847-சேலம் விருத்தாசலம் பயணிகள் ரயில், ரயில் எண்.76850 விருத்தாசலம் சேலம் பயணிகள் ரயில், ரயில் எண் 56513- காரைக்கால் பெங்களூரு பயணிகள் ரயில் மற்றும் ரயில் எண் 76849- விருத்தாசலம் சேலம் பயணிகள் ரயில்) சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பயணச்சீட்டு பரிசோதனையில் 62 பேர் தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து 19,770 ரூபாய் பயணச்சீட்டுத் தொகை மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

அது போல, 19 பேர் தகுந்த புக்கிங் இல்லாமல் சுமைகளை ஏற்றிச் சென்றது கண்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து 3,170 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்த சோதனையை சேலம் கோட்ட துணை வணிகவியல் மேலாளர் எம். ஷாஜஹான் தலைமையிலான 13 பயணச்சீட்டு பரிசோதகர்கள், 3 ரயில்வே பாதுகாப்புப் படை வீர்ர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர். இது போன்ற திடீர் பயணச்சீட்டு பரிசோதனைகள் மேலும் பல இடங்களில் செய்யப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா தெரிவித்தார்.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...