நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: கோவையில் ரசிகர் மன்றம் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தியும், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் செய்து ரசிகர் மன்றத்தினர் உற்சாகம்.


கோவை: தமிழகத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா அவரது ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் அதன் நிர்வாகிகள் கடந்த 3 நாட்களாக ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கோவையில் பாபா படம் வெளியான தியேட்டர்கள் முன்பு மாவட்ட நிர்வாகி சத்தியமூர்த்தி தலைமையிலான ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (நேற்று) 200 ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் 200 ரசிகர்களை ரஜினியின் பாபா படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.



ரஜினி பிறந்த நாளான இன்று சலீவன் வீதியில் உள்ள ஆஞ்சநேயர் சாமி ராகவேந்திரா கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்களும் நடைபெற்றது.



இதனைத் தொடர்ந்து கோவில் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து மாலையில் ஆர்.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோவிலில் 108 தேங்காய்களை உடைத்து வழிபட்டனர். பின்னர் கோட்டை ஈஸ்வரன் சங்கமேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம் நடத்தினர்.

கோவையில் உள்ள அனைத்து கோவில்களிலும் 73 கிலோ இனிப்புகளை வாங்கி பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினர்.



ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி ரஜினி ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகி சத்தியமூர்த்தி தலைமையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், நிர்வாகிகள் பாபு, பட்டணம் ரவி, பிரேம்நாத், மணிவண்ணன், வடிவேல், வெள்ளியங்கிரி, செந்தில்குமார், ராஜேஷ்குமார், ஆனந்த கிருஷ்ணசாமி, செல்லதுரை, ரஜினி கண்ணன், சிவகுமார், பிரபு, பாலாஜி, ஆறுச்சாமி, சாணவாஸ், சுதாகர், ஷான் பாஷா, ஆட்டோ பாபு, ஆட்டோ மனோகர், முருகேசன், முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...