'மாண்டஸ் புயல்' - நீலகிரி மாவட்டத்தில் 2வது நாளாக கடும் குளிர், மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

மாண்டஸ் புயல் காரணமாக உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் 2வது நாளாக அடர்ந்த பனி மூட்டத்துடன் கடும் குளிர் நிலவுவதால், சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி.


நீலகிரி: “மாண்டஸ் புயல்” காரணமாக நேற்று காலை முதல் நீலகிரி மாவட்டத்தில் கடும் பனி மூட்டத்துடன் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடர்ந்த பனி மூட்டத்துடன் கடும் குளிர் நிலவி வருகிறது.

கடுமையான குளிர் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. அதனுடன் மழையும் பெய்ததால் முக்கிய சாலைகள் மற்றும் சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.



இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த பனி மூட்டத்துடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.



மேலும் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால் வாகனங்கள் அனைத்தும் குறைந்த வேகத்தில் முகப்பு விளக்குகளை ஏரிய விட்டபடி பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...