கூடலூரில் பிடிபட்ட PM2 மக்னா யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு சீகூர் வனப்பகுதியில் விடுவிப்பு

கும்கி யானைகளின் உதவியுடன் அந்த யானை பாதுகாப்பாக லாரியில் ஏற்றபட்டு இரவோடு இரவாக முதுமலை புலிகள் காப்பக பகுதிக்குட்பட்ட சீகூர் வன பகுதிக்கு உட்பட்ட அசுர மட்டம் வனத்துக்குள் விடுவிக்கப்பட்டது. கூடலூர் அருகே பிடிபட்ட PM2 மக்னா யானைக்கு ரேடியோ காலர் கருவி பொறுத்தபட்டு சீகூர் வன பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பாக விடுவிக்கபட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புளியம்பரை, வாழவயல், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் PM2 என்ற சுமார் 15 வயது மதிக்கதக்க மக்னா யானை ஒன்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சுற்றித்திரிந்து வந்தது.

பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று விடும் இந்த யானை இரவு நேரங்களில் வீடு வீடாக சென்று சுவற்றை உடைத்து வீட்டிற்குள் இருக்கும் அரிசி போன்ற உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தது.

இதுவரை இந்த மக்னா யானையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த நிலையில், கடந்த மாதம் வாழவயல் பகுதியில் 52வயது மதிக்கதக்க பாப்பாத்தி என்ற பெண்ணின் வீட்டை தாக்கி அவரையும் கொன்றது.

இதனையடுத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த யானையை பிடித்து முதுமலை வனப்பகுதிக்குள் விட தமிழக வனத்துறை அனுமதி அளித்தது.

அதனைத் தொடர்ந்து 18 நாள் தொடர் முயற்சியின் காரணமாக நேற்று மதியம் புளியம்பரை அருகே உள்ள நீடில் ராக் வனப்பகுதியில் வைத்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

பின்னர், கும்கி யானைகளின் உதவியுடன் அந்த யானை பாதுகாப்பாக லாரியில் ஏற்றபட்டு இரவோடு இரவாக முதுமலை புலிகள் காப்பக பகுதிக்குட்பட்ட சீகூர் வன பகுதிக்கு உட்பட்ட அசுர மட்டம் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், அந்த யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு, அதிகாலையில் பத்திரமாக வனத்துக்குள் விடப்பட்டது. லாரியில் இருந்து கீழே இறங்கிய அந்த யானை நன்றாக புற்களை மேய தொடங்கியதுடன் பிளரியபடி வன பகுதிக்குள் நடந்து சென்றது.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த மக்னா யானையை பத்திரமாக பிடித்து வேறு பகுதியில் உள்ள வனத்துக்குள் விடுத்தவனத்துறையினருக்கு கூடலூர் பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...