கோவை சரவணம்பட்டியில் மெகா சூதாட்டம் மற்றும் மது பாட்டில்கள் பதுக்கல் - ரூ.4.86 லட்சம் பறிமுதல், 32 பேர் கைது..!

இரு வேறு சம்பவங்களில், சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட இடங்களில் ரூ.4.86 லட்சத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்தனர், அதே போல, 138 மதுபாட்டில்களை டாஸ்மாக்கில் பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்தனர்.



கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மெகா சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது, ஒரு வீட்டில் ஒரு கும்பல் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களை போலீசார் பிடிக்க முயற்சி செய்த போது, போலீசார் வருவதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் ரூ.4.86 லட்சத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்து, அவர்கள் சூதாட்டத்திற்கு வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று சரவணம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமிக்கு கணபதி பகுதியில் திருட்டுத்தனமாக மதுபாட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த ஒரு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மது விற்பனையில் ஈடுபட்ட நெல்லையை சேர்ந்த கணேசன் (30) என்பவரை பிடித்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 138 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...