திருப்பூரில் பழைய வேஸ்ட் குடோனில் திடீர் தீ விபத்து - ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகி சேதம்

பெருமாநல்லூர் அடுத்த போயம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய பொருட்கள் குடோனில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான நிலையில், விளக்கு அல்லது பட்டாசால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த போயம்பாளையம் பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருபவர் ஶ்ரீ ராம். மேலும் அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக பழைய பொருட்களை சேமித்து வைக்கும் குடோன் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.



இந்நிலையில் நேற்றிரவு ஏழு மணியளவில், அந்த குடோனிலிருந்து புகை வந்துள்ளது. பின்பு திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக அருகிலிருந்தவர்கள் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



இதன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து குறித்து குடோன் உரிமையாளர் கூறியதாவது, குடோனை இரவு நேரம் பயன்படுத்தாத காரணத்தால் குடோனில் மின் இணைப்பு இல்லை. நேற்று கார்த்திகை தீபம் என்பதால் அருகிலுள்ள வீடுகளிலிருந்து விளக்கோ அல்லது பட்டாசோ விழுந்து தீப்பிடித்திருக்கலாம்.

இந்த தீ விபத்தின் காரணமாக குடோனில் இருந்த கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்து உள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...