திமுக அரசை கண்டித்து கோவையில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் - அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ள உண்ணாவிரத போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்..


கோவை: தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்வு மற்றும் சாலை பராமரிப்பு செய்ய வலியுறுத்தியும் கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.



அதன்படி, கோவை மாவட்டத்தில் சொத்து வரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, பால் விலை, கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், கோவை மாவட்டத்தில் சாலைகள், மேம்பால பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தியும் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.



முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.



இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...