திருப்பூர் பல்லடத்தில் தனியார் கழிவு பஞ்சு அரவை ஆலையில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின..!

பல்லடம் அடுத்த பூமலூரில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு அரவை ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்திய நிலையில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சமீம். இவருக்கு சொந்தமான கழிவு பஞ்சு அரவை ஆலை பூமலூர் வண்ணந்தோட்டம் பகுதியில் இயங்கி வருகிறது. இதில் வட மாநில தொழிலாளர்கள் உட்பட 50 மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு தொழிலாளர்கள் சிலர் பணியில் இருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பஞ்சு மூட்டைகளில் தீ மளமளவென பரவிய நிலையில், தொழிலாளர்கள் அங்கிருந்து பத்திரமாக தப்பிச் சென்றுள்ளனர்.



இதையடுத்து தீ விபத்து குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் மங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 5 தண்ணீர் லாரிகள் மற்றும் ஜேசிபி உதவியுடன் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் மற்றும் கட்டிடங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்திற்கு மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...