கோவை மணியகாரம்பாளையம் அருகே பொதுச் சாலை ஆக்கிரமிப்பை போலீசார் உதவியுடன் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்..!

கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் பொதுச் சாலையை இருபுறமும் கேட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்ததை குழாய் பதிக்கும் பணிக்காக ஜேசிபி மூலம் காவல்துறை உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.



கோவை: கோவை மாவட்டம் கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் சீனிவாசா நகர் செல்லும் சாலையோரத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.



இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் கோவை மாநகராட்சி நகர்ப்புற மேம்பாட்டு அலுவலர் விமலா தலைமையில் அதிகாரிகள் குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு புதிய குடியிருப்பு வழியாக சென்ற சாலையை ஆக்கிரமித்து கேட் அமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அவ்வழியாக குழாய்களைக் கொண்டு செல்வதற்கு குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



இதனையடுத்து உடனடியாக சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.



இந்நிலையில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கேட்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்ற முயற்சித்தனர்.



இதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக அகற்ற வேண்டாம், கால அவகாசம் கொடுங்கள் என மாநகராட்சி அலுவலரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர், முதல்வர் தனிப்பிரிவு ஆகியோருக்கு தகவல் அனுப்பி உள்ளதாகவும் அதற்கு பதில் கிடைத்த பின் மாநகராட்சி பணி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.



இந்நிலையில், மாநகராட்சி அதிகாரியின் உத்தரவின் பேரில் இருபுறமும் இருந்த கேட்டுகள் அகற்றப்பட்டன. குழாய் பதிக்கும் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும் என கூறிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.



இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...