நீலகிரி முதுமலையில் புலி தாக்கி வேட்டை தடுப்பு காவலர் படுகாயம் - அச்சத்தில் பொதுமக்கள்..!

முதுமலை வனச்சரக வேட்டை தடுப்பு காவலர் பொம்மனை புலி தாக்கிய நிலையில், உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு அந்த புலியை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் உள்ள தெப்பக்காடு பகுதியை சேர்ந்தவர் பொம்மன்(33). இவர் முதுமலை வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் விடுமுறையில் இன்று தெப்பகாடு லைட் பாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்ற போது குடியிருப்பை ஓட்டி புதரில் பதுங்கி இருந்த புலி அவரை தாக்கியுள்ளது.



இதில் தலை, முதுகு மற்றும் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பொம்மன் புலியை தைரியமாக எதிர்த்து நின்று சண்டையிட்டதால் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.



இதையடுத்து சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொம்மனை தாக்கிய புலி வயதான புலி என்றும் கடந்த சில நாட்களாக தெப்பக்காடு பகுதியில் சுற்றித்திரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் முன்பு உடனடியாக அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள், வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...