கோவை துடியலூர் காவல் நிலைய வளாகத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம்

கோவை துடியலூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.


கோவை: கோவை துடியலூர் காவல் நிலையம், ஜே.எம்.ஜே. ஹவுசிங் அறக்கட்டளை மற்றும் கோவை மத்திய அரிமா சங்கம் இணைந்து இலவச சர்க்கரை நோய் கண்டறிதல்,விழிப்புணர்வு முகாம், சர்க்கரைநோயாளிகளுக்கு கண் பரிசோதனை முகாம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம் துடியலூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில்நடைபெற்ற முகாமில் ல் சிறப்பு விருந்தினர்களாக கோவை மத்திய அரிமா சங்க மாவட்ட கவர்னர் ராம்குமார், முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாபுதீன் பங்கேற்றனர்.

இம்முகாமில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக சர்க்கரை நோய் கண்டறிதல் நடத்தப்பட்டது. மேலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் விழித்திரை பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டறியப்பட்டு இலவசமாக லேசர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்போக்குவரத்தை சீர் செய்ய ஜே.எம்.ஜே. ஹவுசிங் நிறுவனம் சார்பில் அதன் மேலான் இயக்குநர் வில்சன் பி தாமஸ்பேரி கார்டுகளை துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரனிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...