விவசாய பணியில் 10 பேர் செய்யும் வேலையை ஒரே நேரத்தில் செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்த கோவை நிறுவனம்

விவசாய நிலங்களில் களையெடுப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் அக்ரி ஈசி என்ற இயந்திரத்தை கோவை சேர்ந்த தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.


கோவை: நிலத்தில் இறங்கி வேளாண் பணிகளை மேற்கொள்ள சமீபகாலமாக ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே அதனை ஈடுகட்டும் விதமாக இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.



அந்த வகையில் களையெடுப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அக்ரி ஈசி என்ற இயந்திரத்தை கோவையை சேர்ந்த புல் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த இயந்திரத்தை கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சீதாலட்சுமி அறிமுகப்படுத்தி வைத்தார்.



"அக்ரிஈஸி" இயந்திரம் மின்சாரத்தில் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய லித்தியம் பேட்டரியால் இயக்கப்படுகிறது. இந்த எந்திரம் களை எடுப்பது மட்டுமின்றி சில மாற்று உபகரணங்களை உபயோகப்படுத்தி பயிர்களுக்கு மருந்து தெளிக்க, பளு தூக்க மற்றும் பல விவசாய பணிகளையும் செய்யும் விதத்தில் உருவக்கப்பட்டுள்ளது.

தேவைக்கேட்ப மாற்று உபகரணங்களை நான்கு நிமிடத்தில் பொருத்தி அதற்கான பணிகளை செய்யும் வண்ணம் இந்த "அக்ரிஈஸி" வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை பயன்படுத்தி 10 வேலையாட்கள் செய்யும் பணிகளை ஒரு நபரால் செய்யமுடியும் என அதனை வடிவமைத்துள்ள புல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

களை எடுப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 8 ரூபாய் மட்டுமே செலவாகும் என்றும் இந்த இயந்திரத்தை மண்ணின் தன்மையை பொருத்து 5 மாறுபட்ட வேகங்களில் இயக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் நான்கரை மணி நேரம் தொடர்ந்து இயக்கமுடியும் என தெரிவித்துள்ள புல் நிறுவனம், இயந்திரத்தில் இருக்கும் தெளிப்பான் 33 லிட்டர் கொள்ளளவு கொண்டது என தெரிவித்துள்ளது. இந்த இயந்திரம் சுமார் 80 கிலோ வரை எடை தூக்க வல்லமை கொண்டது என தெரிவித்துள்ள அந்நிறுவனம் இதில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளதாக கூறியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...