கோவையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு

கோவை கவுண்டம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து 12 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்த போலீசார்,ஜாமினில் அவர்களை விடுதலை செய்தனர்.


கோவை: துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுண்டம்பாளையம் அருகே உள்ள சேரன் நகர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில்அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்ட போலீசார், விடுதி ஒன்றில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன், ராஜேஷ், கண்ணப்ப நகரைச் சேர்ந்த வேடியப்பன், சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விமல் ராஜ், பி.என்.புதூரைச் சேர்ந்த கார்த்திக் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

இதனைதொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 12 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்ததுடன் 5 பேரையும் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...