திருப்பூரில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் - கூடுதல் காவல் தலைமை இயக்குநர் துவக்கி வைத்தார்

குள்ளேகவுண்டன் புதூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தை துவக்கி வைத்த கூடுதல் காவல் தலைமை இயக்குநர் சஞ்சய் குமார், அங்கு பயிற்சியும் மேற்கொண்டார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குள்ளேகவுண்டன் புதூரில் தனியார் பள்ளி வளாகத்தில் பிளாட்டோஸ் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சஞ்சய் குமார் கலந்து கொண்டு, துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார். இதன் பின்னர் துப்பாக்கி சுடும் மையத்தின் தரத்தை ஆய்வு செய்து பயிற்சியாளர்களின் அனுபவம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.



இதனையடுத்து பயிற்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஏர் கன் வகைகளை பார்வையிட்டு துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டார். அப்போது திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரனும் அவருடன் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டார்.



இறுதியாக இருவருக்கும் பயிற்சி மையத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...