நீலகிரியில் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி - கூண்டு வைத்து பிடித்த வனத்துறை

மஞ்சூர் பகுதியில் இரவு நேரங்களில் உணவு தேடி வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்த நிலையில், முக்குருத்தி தேசிய பூங்கா வனப்பகுதியில் கரடியை விடப்பட்டது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் கடந்த சில மாதங்களாக கரடி ஒன்று சுற்றித்திரிந்து வந்தன. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்குள் சென்று தூங்கும் அந்த கரடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகள் மற்றும் கடைகளின் கதவு, ஜன்னல்களை உடைத்து உணவு பொருட்களை உண்டு சேதப்படுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மஞ்சூர் பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் இருந்து வந்த நிலையில், அந்த காரடியை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து,கரடியின் நடமாட்டம் இருக்க கூடிய பகுதிகளை கண்டறிந்த வனத்துறையினர், கரடியை பிடிப்பதற்காக கடந்த வாரம் கூண்டு வைத்திருந்தனர்.

அந்த கூண்டில் இன்று அதிகாலை கரடி சிக்கியதை அடுத்து கரடியை அருகில் உள்ள முக்குறுதி தேசிய பூங்கா வனப்பகுதிக்குள் கொண்டு சென்று திறந்து விட்டனர். கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...