நீலகிரியில் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி - கூண்டு வைத்து பிடித்த வனத்துறை

மஞ்சூர் பகுதியில் இரவு நேரங்களில் உணவு தேடி வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்த நிலையில், முக்குருத்தி தேசிய பூங்கா வனப்பகுதியில் கரடியை விடப்பட்டது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் கடந்த சில மாதங்களாக கரடி ஒன்று சுற்றித்திரிந்து வந்தன. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்குள் சென்று தூங்கும் அந்த கரடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகள் மற்றும் கடைகளின் கதவு, ஜன்னல்களை உடைத்து உணவு பொருட்களை உண்டு சேதப்படுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மஞ்சூர் பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் இருந்து வந்த நிலையில், அந்த காரடியை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து,கரடியின் நடமாட்டம் இருக்க கூடிய பகுதிகளை கண்டறிந்த வனத்துறையினர், கரடியை பிடிப்பதற்காக கடந்த வாரம் கூண்டு வைத்திருந்தனர்.

அந்த கூண்டில் இன்று அதிகாலை கரடி சிக்கியதை அடுத்து கரடியை அருகில் உள்ள முக்குறுதி தேசிய பூங்கா வனப்பகுதிக்குள் கொண்டு சென்று திறந்து விட்டனர். கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...