கோவையில் பரவும் 'மெட்ராஸ் ஐ பாதிப்பு' - எச்சரிக்கையுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்..!

மெட்ராஸ் ஐ பாதிப்பு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பதிவாகி வந்த நிலையில் தற்போது, கோவையில் பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்.


கோவை: மெட்ராஸ் ஐ எனப்படும் 'கான்ஜுன்க்டிவிடிஸ்' நோய் பாதிப்பு கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில்கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது, கோவையில் மெட்ராஸ் ஐ நோய் பாதிப்பு அதிகளவில் பதிவாகி வருகிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குஇந்த நோய் எளிதில் பரவுகிறது.

குறிப்பாக கோவை அரசு மருத்துவமனையில் சுமார் 20 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, காய்ச்சல் அறிகுறியுடன் சென்ற நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

இதனால் பொதுமக்கள் விழிப்புடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனமருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது, மெட்ராஸ் ஐ பொதுவாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு, வேகமாக பரவும். மேலும் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் கண்களில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் சிவத்தல், அழுக்குகள் வெளியேற்றம் மற்றும் அதிக உறுத்தல் ஆகியவை ஏற்படும்.

இது ஒரு சிறிய கண் தொற்று என்றாலும், சரியான முறையில் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். மாறாக மஞ்சள், சொட்டு மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

கண் நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், கண் சொட்டு மருந்துகளைமட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவரின் உடைமைகளை பயன்படுத்துவதால், இந்நோய் மற்றொருவருக்கு எளிதில் பரவும்.

எனவே, நோயாளிகளை தனிமைப்படுத்துவது முக்கியம். நோயாளிகள் தங்கள் கண்களை அடிக்கடி கழுவினால் போதும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

நோய் பாதித்தவர்கள் சரியாகும் வரை, பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதோடு, கண் கண்ணாடியை பயன்படுத்தலாம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...