தமிழக ஆளுநர் மக்களின் நலனுக்காக செயல்படாமல் பாஜக-வின் ஊதுகுழலாக பணியாற்றுகிறார் - திருப்பூரில் துரை வைகோ

நாடாளுமன்ற தேர்தலில் திமுக-வுடனான கூட்டணியே தொடரும் என்று திருப்பூரில் பேட்டியளித்த மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, மதவாத சக்தியை தோற்கடிக்க இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என கூறியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் மாமனிதன் வைகோ என்னும் ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.



மதிமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு ஆவணப்படத்தை திரையிட்டார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக ஆளுநர் மக்களின் நலனுக்காக செயல்படாமல் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஊதுக்குழலாக செயல்பட்டு வருவதாக சாடினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-வுடனான கூட்டணியே தொடரும் என கூறியுள்ள துரை வைகோ, மதவாத சக்திகளை தோற்கடிக்க இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தெலங்கானாவில் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் தான் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த போது, நாட்டில் தற்போது உள்ள சூழல் மற்றும் அவைகளை முறியடிக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்ததாக கூறினார்.



மாமனிதன் வைகோ ஆவணப்பட திரையிடும் நிகழ்ச்சியில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...