குன்னூரில் தனியார் பங்களாவிற்குள் நுழைந்து மேஜை நாற்காளிகளை சேதப்படுத்திய காட்டு மாடு- பொதுமக்கள் அச்சம்

குன்னூரில் உள்ள தனியார் பங்களாவிற்குள் ஆக்ரோஷத்துடன் நுழைந்து அங்கிருந்த மேஜை நாற்காளிகளை காட்டு மாடு சேதப்படுத்திய நிலையில், அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: குன்னூரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் யானை, கரடி போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக குன்னூர் நகரப் பகுதியில் சுற்றி வரும் காட்டு மாடுகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.



இந்நிலையில் குன்னூர் கிளப்ரோடு பகுதியில் உள்ள தனியார் பங்களாவிற்குள் நுழைந்த காட்டுமாடு அங்கு வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த டேபிள், சேர்கள், டீ ப்பாய்களை ஆக்ரோஷத்துடன் சேதப்படுத்தி விட்டு சென்றது.



வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது தங்களை அச்சுறுத்தி வரும் காட்டுமாடுகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...