கோவையில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை - கடந்த ஒருவாரத்தில் ரூ.13.50 லட்சம் அபராதமாக வசூல்

சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் தமிழக அரசு அபராத தொகை உயர்வு அமலுக்கு வந்த நிலையில் கோவை மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் 1,349 பேரிடம் ரூ.13. 50 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தகவல்.


கோவை: தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்பை தடுப்பதற்காக போக்குவரத்து விதி மீறலுக்கு அபராத தொகையை உயர்த்தி சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் மோட்டார் வாகன சட்டங்களை கடுமையாக்கும் வகையில் பல மடங்கு அபராத தொகை உயர்த்தப்பட்டது.

அதன்படி, இருசக்கர வாகனம், கார், வேன், லாரி, ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் மூலம் உண்டாகும் விபத்தை குறைப்பதற்காக கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் புதிய அபராத தொகைஅமலுக்கு வந்தது.

இந்நிலையில் கோவை மாநகரம் முழுவதும் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில்ட்ராஃபிக் போலிசார் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகளில் சிக்னல்களில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

30 வகையான விதிமீறல்கள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அதிக வேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும்படி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், ஒரு வழிப்பாதையில் வாகனம் ஓட்டுதல், மோட்டார் சைக்கிளில் 3 பேர் அமர்ந்து செல்லுதல், டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக 1,000 ரூபாய்அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல், இருசக்கர வாகனம் ஓட்டினால் 1,000 ரூபாய், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் 1,000 ரூபாய், சிக்னலை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,349 பேருக்கு ரூ.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

புதிய அபராத நடைமுறைகளின் படி, அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக பாரம் ஏற்றி வரும் சரக்கு வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், கூடுதலாக இருக்கும், ஒவ்வொரு டன்னுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது, கோவை மாநகரில் மோட்டார் வாகன விபத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை ஓட்டினால் விபத்து குறையும். உயிரிழப்பு தவிர்க்கப்படும்.

விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை தொடரும். அபராதத் தொகை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாகவோ, அல்லது நீதிமன்றம் மூலமாகவோ செலுத்தி குற்ற தண்டனை நடவடிக்கையில் இருந்து விடுவித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...