உதகை வானியல் ஆராய்ச்சி மைய வளாகத்தில் சுற்றி திரிந்த 2 சிறுத்தைகள் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு

உதகையில் உள்ள மத்திய அரசின் வானியல் ஆராய்ச்சி மைய வளாகத்திற்குள் சுற்றி திரிந்த 2 சிறுத்தைகளின் பரபரப்பு சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.



நீலகிரி: நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.

குறிப்பாக சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்து வளர்ப்பு நாய்களை வேட்டையாடி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உதகை அருகே உள்ள மேல்கவ்ஹட்டி செல்லும் சாலையில் அமைந்டதுள்ள மத்திய அரசின் வானியல் ஆராய்ச்சி மைய வளகாத்திற்குள் நேற்றிரவு 2 சிறுத்தைகள் நுழைந்தன.

பின்னர் அவை அங்குள்ள கதிர்வீச்சு சேகரிப்பு கருவிகள் வழியாக அங்கும் இங்கும் நடந்து சென்று உணவு தேடின. சிறிது நேரத்திற்கு பின்னர் 2 சிறுத்தைகளும் வன பகுதியை நோக்கி சென்றன.

சிறுத்தைகள் சுற்றி திரிந்த வீடியோ காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான நிலையில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...