கோவை தெற்கு மண்டலம் ஈச்சனாரி பகுதிகளில்‌ புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்கள் திறப்பு

கோவை தெற்கு மண்டலம் வார்டு எண்‌.97க்குட்பட்ட ஈச்சனாரியில்‌ ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்‌, புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.97க்குட்பட்ட ஈச்சனாரியில்‌ 97 மற்றும்‌ 100வது வார்டு பகுதிகளில்‌ 6 திட்டத்தின்‌ கீழ்‌ தலா ரூ.15 இலட்சம்‌ வீதம்‌, மொத்தம்‌ ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்‌, புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டன.



புதிதாக கட்டப்பட்ட 7 அங்கன்வாடி மையங்களையும் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து அங்கன்வாடி அமைப்பாளர்களிடம்‌ சாவியை வழங்கினார்கள்‌.

பின்னர் PMJVK திட்டத்தின் கீழ்‌ தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு 15 எண்ணிக்கையில்‌ அங்கன்வாடி மையம் மற்றும்‌ 1 எண்ணிக்கையில்‌ பள்ளி கழிப்பிடம்‌ கட்டுவதற்கு ரூ.245 இலட்சம்‌ ஓதுக்கீடு செய்யப்பட்டது.



PMJVK திட்டத்தின் முதற்கட்டமாக வார்டு எண்‌.97க்குட்பட்ட ஈச்சனாரி மற்றும்‌ கோண்டிஸ்‌ காலனி ஆகிய இடங்களிலும்‌, வார்டு எண்‌.100க்குட்பட்ட மேட்டூர்‌, அம்மன்புதூர்‌, அன்னாபுரம்‌, கணேசபுரம்‌ மற்றும்‌ ஈஸ்வரன்‌ செட்டியார்‌ வீதி உள்ளிட்ட 5 இடங்களிலும்‌, தலா ரூ.15 இலட்சம்‌ வீதம்‌, மொத்தம்‌ 7 இடங்களில்‌ ரூ.1.05 கோடி மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களையும் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்‌.



இந்நிகழ்ச்சியில்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா, தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சி கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ அப்துல்‌ காதர் ,உதயகுமார்‌, அஸ்லாம்பாஷா, உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, உதவி பொறியாளர்‌ சபரிராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ பலர் கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...