கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் திடீர் ஆய்வு

பள்ளியின் கட்டிடம், பள்ளி வளாகத்தின் தூய்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சமீரன், பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.



கோவை: கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அண்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன், பள்ளியின் கட்டிடம், பள்ளி வளாகத்தின் தூய்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். மேலும் பள்ளியின் கழிப்பறையையும் ஆய்வு செய்தார்.



இதனை தொடர்ந்து அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளிடம் கலந்துரையாடி மகிழ்ந்தார். அங்கு குழந்தைகளுக்கு எவ்வாறு எளிய முறையில் கல்வி கற்றுத்தரப்படுகிறது எனவும் பார்வையிட்டார்.



மேலும் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்தும் ஆசிரியர்களிடம் மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டறிந்தார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...