கோவையில் மின்சாரம் பாய்ந்து பள்ளி சிறுவன் உயிரிழப்பு - புது வீட்டுக்கு சென்ற ஒரே வாரத்தில் சோகம்…!

புது வீட்டுக்கு சென்ற ஒரே வாரத்தில் பள்ளிச் சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பாக சுல்தான்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் குமார். கூலி வேலை செய்து வருகிறார். இவர் கோவை மாவட்டம் சூலூர் எஸ்.அய்யாபாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகன் வெற்றிவேல் (16), செஞ்சேரிமலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், குமார் அண்மையில் புதிய வீடு கட்டியுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக புது வீட்டில் தங்கியிருந்த நிலையில், யு.பி.எஸ் மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று வெற்றிவேல் வீட்டில் இருந்த போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது சிறுவன் யு.பி.எஸ் ஐ ஆன் செய்ய முயன்றுள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சுல்தான்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புது வீட்டிற்கு சென்ற ஒரே வாரத்தில் பள்ளிச் சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...