கோவை வடகிழக்கு மண்டலத்தில் கமல்ஹாசனின் 68 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது

சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாமில் இது வரை பல இலட்சம் இரத்தம் சேர்ந்துள்ளதாகவும் அதன் பயன் பெற மக்கள் நீதி மையம் அழைப்பு கொடுத்துள்ளது.


கோவை: நவம்பர் 7ஆம் தேதி நம்மவர் டாக்டர் கமல்ஹாசனின் பிறந்தநாள் இந்த 68 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை வடகிழக்கு மாவட்டமான சிங்காநல்லூர், சூலூர் மக்கள் நீதி மையம் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது.



சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில் மநீம மாநிலச் செயலாளர் அனுஷாரவி, மண்டல செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு மாவட்ட செயலாளர் மனோரம்யன் முந்நிலையில் மற்றும் மாவட்ட பொருளாளர் வரதராஜ் , மாவட்ட துணை செயலாளர்கள் கேபிள் R.செந்தில்குமார், மயில்கணேஷ், மாவட்ட அமைப்பாளர் (நற்பணி) ஜெயசுதன், மாவட்ட துணை அமைப்பாளர் ஜெய்கணேஷ்,மணிமொழி ஆகியோர் ஒருங்கணைத்தனர்.



மாநகராட்சி செயலாளர்கள் தன்ராஜ், SN ரவிந்தரன், சௌந்தர்ராஜன், சுகுமார் ஒன்றிய செயலாளர்கள் ஶ்ரீதர்,தனபால், பால்ராஜ், மாநகராட்சி பொருளாளர்கள் முருகராஜ், சிவசண்முகம், கார்த்தி. வட்ட செயலாளர்கள் ஜிஜு,பால்ராஜ்,முருகேஷ்,மோகன், பிரபாகரன், அன்னபூரணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுவரை மக்கள் நீதீ மைய நற்பணி மன்றங்கள் மூலம் பல இலட்சம் லிட்டருக்கு மேலாக இரத்தம் அளிக்கப்பட்டுள்ளது.

24/7 கால அளவரையில் இயங்கும் Kamals blood commune என்ற அமைப்பு மக்கள் நீதி மய்யம் சார்பாக நடத்தப்படுகிறது.

9150108889 எனக்கிற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு இரத்தம் வேண்டுவோர் உதவி பெறலாம்

என மக்கள் நீதி மையம் அறிவித்துள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...