கோவையில் மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த நண்பரை கத்தியால் குத்திய இளைஞர் - பரபரப்பு

கோவை குறிச்சி பிரிவு பேருந்து நிலையத்தில் கமலக்கண்ணன் என்பவர் தனது நண்பர் அந்தோனி என்பவரிடம் குடிக்க பணம் கேட்டு அவர் மறுத்ததால், கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட சிட்கோ காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர். இவரது மகன் அந்தோணி நிக்சன் (26) ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் நேற்றிரவு தனது நண்பரான ஞானசீலன் என்பவரை பார்க்க குறிச்சி பிரிவு பேருந்து நிறுத்ததிற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே பழக்கமான கமலக்கண்ணன் (25) என்பவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்தோணி மது போதையில் இருந்ததால் கமலகண்ணனும் மது குடிக்க ரூ.200 கேட்டுள்ளார். அப்போது, அந்தோணி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கமலகண்ணன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்தோணியின் முகத்தில் வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவரை ஞானசீலன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள கமலக்கண்ணனை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...