டாஸ்மாக் பாரில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட மதுப்பிரியர்கள் கைது - 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கோவை அறிவொளி நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுப்பிரியர்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை அறிவொளி நகர் பகுதியில் டாஸ்மாக் கடையுடனான பார் இயங்கி வருகிறது. இந்த பாருக்கு நேற்றைய தினம் 2 மதுப்பிரியர்கள் வந்து மது அருந்தியுள்ளனர்.

இதனையடுத்து, மதுப்பிரியர்கள் இருவரும் பாரில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதில், பார் ஊழியர்களுக்கும் மதுப்பிரியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த மதுப்பிரியர்கள் பாரில் இருந்த சேர் மற்றும் டேபிள்களை தரையில் போட்டு உடைத்துள்ளனர். மேலும் காலி பாட்டில்களை பார் ஊழியர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் போலீசார், ரகளையில் ஈடுபட்ட மதுப்பிரியர்களான அஜித் மற்றும் தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதனைதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதையில், மேஜை மீது காலை போட்டதால் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும், அவர்கள் மீது, காயம் ஏற்படுத்தல், மிரட்டல் விடுத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மதுப்பிரியர்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...