கோவை வெடிவிபத்து சம்பவமாக நடைபெற்ற ஜனநாயக இயக்கங்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றல்

கோவை CPI(M) அலுவலகத்தில் இன்று மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் முன்னிலையில் ஜனநாயக இயக்கங்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் கோவை வெடி விபத்து காரணமாக நிகழும் அசம்பாவிதங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டது.



கோவை: கோட்டை மேடு பகுதியில் வெடி பொருள் மற்றும் சிலிண்டர் கேஸ் வெடிப்பால் ஒரு உயிர் பலியும், வெடி விபத்தும் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை முழுக்க பெரும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களின் அமைதிக்கு எதிராக பல்வேறு சலசலப்புகள் நிகழ்கின்றன. தேவையற்ற பிரச்சனைகள் அதிகரிப்பதை தவிக்கும், தடுக்கும் விதமாக இன்று கோவை CPI(M) அலுவலகத்தில் இன்று மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் முன்னிலையில் ஜனநாயக இயக்கங்களின் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் M. ஆறுமுகம் EX MLA , C.பத்மநாபன் CPI (M) மாவட்ட செயலாளர், C.சிவசாமி CPI மாவட்ட செயலாளர், J.ஜேம்ஸ் CPI மாவட்ட துணைச் செயலாளர், UK.சிவஞானம் CPI (M) மாவட்ட செயற்குழு, ச.தமிழ்செல்வன் பொதுச் செயலாளர் (காங்கிரஸ்), M.அனீஸ் செயலாளர் (காங்கிரஸ்), கு.ராமகிருஷ்ணன் பொதுச்செயலாளர் த.பெ.தி.க, ஜோ.இலக்கியன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

23 ம் தேதி கோவையில் நடைபெற்ற வெடிச்சம்பவம் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்துகிறது. தமிழக காவல்துறையின் விரைவான நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

காவல்துறை உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதற்கும், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கும் எடுத்துவரும் நடவடிக்கைக்களுக்கு இடையூறாக பரப்பப்படும் உண்மைக்கு மாறான செய்திகளையும் தொடர் பதற்றத்தை ஏற்படுத்துமாறு சில ஊடகங்களின் செய்தி வடிவமைப்பையும் இக்கூட்டம் வன்மையாக் கண்டிக்கிறது.

குற்றம் நடத்தப்பட்ட விதம் கண்டறியப்படுவதற்கும் குற்றவாளிகள் தண்டிக்க படுவதற்கும் இக்கூட்டம் எல்லா வகையிலும் ஆதரவு தருகிறது. ஆனால் அதே நேரத்தில் குற்றத்தோடு அவர்கள் சார்ந்த மதம் இணைக்கப்படுவதை இக்கூட்டம் முழுமையாக நிராகரிக்கிறது.

கோவையின் தொழிலுக்கும் – வியாபாரத்திற்கும், சமூக அமைதியும் வகுப்பு நல்லிணக்கமும் இன்றியமையாதது. என்பதை அனைவரும் உணர்ந்து செயலாற்ற வேண்டும், என்று கோவை மக்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

இம்மாதிரியான சம்பவங்கள் ஒரு மதத்திற்கு எதிரானதாக பயன்படுத்தபடுவதை மக்கள் எச்சரிக்கையோடு நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

என ஜனநாயக மக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...