வால்பாறை தேயிலை தோட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த ட்ராக்டர் - வடமாநில தொழிலாளி படுகாயங்களுடன் மீட்பு

கோவை வால்பாறை தேயிலை தோட்டத்திற்கு மருந்து தெளிப்பதற்காக வந்த ட்ராக்டர் கட்டுப்பாட்டை இழந்து மலை பாதையில் இருந்து 100 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த வடமாநில தொழிலாளி காட்டு பகுதியில் இருந்து மீட்கபட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.



கோவை: வால்பாறை அருகே மானிக்கா எஸ்டேட் பகுதியில் காலை 8 மணி அளவில் தேயிலை தோட்டத்திற்கு மருந்து தெளிப்பதற்காக எஸ்டேட் மருந்து கிடங்கில் இருந்து வட மாநில தொழிலாளி சஞ்சய் மற்றும் முருகன் ஆகிய இருவரும் டிராக்டர் மூலம் வந்துள்ளனர்.

அவர்கள் மருந்தை எடுத்து கொண்டு 38 ம் நம்பர் தோட்டத்திற்கு சென்று உள்ளனர். டிராக்டரை வட மாநில தொழிலாளி சஞ்சய் இயக்கியதாக கூறப்படுகிறது. மலைப்பாதையில் செல்லும் பொழுது ட்ராக்டர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக மலை பாதையில் இருந்ந்து 100 அடி பள்ளத்தில் விழுந்தது.



இதில் வட மாநில தொழிலாளி சஞ்சய் மற்றும் முருகன் ஆகியவர்கள் பலத்த காயங்களுடன் காட்டிற்குள் விழுந்தனர். டிராக்டர் மலையில் விழுந்ததில் சுக்குநூறாக உடைந்துள்ளது.



தேயிலை தோட்டத்தில் வேலைக்கு வந்தவர்கள் டிராக்டர் விழுந்த சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் காப்பாற்றி எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் முருகன் என்பவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது ஆனால் டிராக்டர் இயக்கிய சஞ்சய் பலத்த காயம் அடைந்து உள்ளார். இவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டுள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...