கோவை காவலர் பள்ளி வளாகத்தில் பாரா சைலிங்கில் பறந்த டிஐஜி முத்துச்சாமி மற்றும் துணை ஆணையாளர் சிலம்பரசன்

காவலர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற என்.சி.சி மாணவர்களுக்கான பாரா சைலிங் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட டிஐஜி முத்துச்சாமி மற்றும் துணை ஆணையர் சிலம்பரசன் ஆகியோர் பாரா சைலிங்கில் பறந்தனர்.



கோவை: கோவை காவலர் பள்ளி வளாகத்தில், தேசிய மாணவர் படை சார்பில் பள்ளி, கல்லூரி என்.சி.சி மாணவர்களுக்கான பாரா சைலிங் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் என்.சி.சி மாணவர்களுக்கு பாரா சைலிங் பயிற்சி வழங்கப்பட்டது.



இதற்காக தகுந்த பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், நேற்று பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் தயார் செய்த போது, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பாரா சைலிங்கில் பறந்து அசத்தினார்.



இந்நிலையில் இன்று என்.சி.சி மாணவர்களுக்கான பயிற்சி துவங்கிய நிலையில் அங்கு வந்த கோவை சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி, மற்றும் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் சிலம்பரசன் ஆகியோர் பாரா சைலிங்கில் பங்கேற்றனர்.



முன்னதாக அவர்களுக்கு பாரா சைலிங் குறித்தான விதிமுறை மற்றும் எவ்வாறு கீழே இறங்க வேண்டும் என்ற வழிமுறைகள் கூறப்பட்டது. இதையடுத்து இருவரும் பாரா சைலிங்கில் பறந்தனர். அதனை தொடர்ந்து என்.சி.சி மாணவர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...