ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீதும், காவல் துறையினர் மீதும் நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் மனு


தமிழகத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் போது இறுதிநாட்களில் வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீதும், மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் மாநிலத் தலைவர் எம்.யுவராஜா அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையினை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பினை தடை செய்யக் கோரியும் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களால் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம் ஒரு வார காலமாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென சட்ட விரோத கும்பல் ஊடுருவிட்டதாகக் கூறி கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவின்பேரில் காவல்துறையினர் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி அனைவரையும் கலைந்துபோக செய்தனர்.

எனவே, கோவை மாநகர காவல் துறை ஆணையர் கூறிய சட்ட விரோத கும்பலை அடையாளம் கண்டு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்ககோரியும், வன்முறை தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு வேளை காவல்துறை தவறு செய்தவர்களை கண்டிக்கத் தவறினால் பாதிக்கப்பட்டவர்களோடு மனித உரிமை ஆணையத்தை நாடுவோம். இதுகுறித்து சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளேன்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...