குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை சட்ட மையத் துவக்கவிழா


குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை சட்ட மையத் துவக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் காப்புரிமை மற்றும் வடிவமைப்பு துணை கட்டுப்பாட்டாளர் டாக்டர் எஸ்.பி.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று  இவ்விழாவை துவங்கிவைத்தார்.



இதைத்தொடர்ந்து, அறிவுசார் சொத்துரிமை சட்ட மையத்தைப் பற்றியும் அதை சார்ந்த தகவல்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். 

முன்னதாக குமரகுரு கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.குமார் வரவேற்புரை ஆற்றினார். இணை தாளாளர் சங்கர் வானவராயர் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார். 

இதைத்தொடர்ந்து, குமரகுரு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் 6 ஆவணங்கள் காப்புரிமைக்காக சமர்ப்பிக்கபட்டுள்ளது. இத்தகைய தொடக்கம் இனி வரும் மாதங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மேலும் பல ஆவணங்களுக்கு காப்புரிமை பெற உறுதுணையாக இருக்கும் என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...