மொசூல் நகரில் 19 எண்ணெய் கிணறுகளுக்கு தீவைத்த ஐ எஸ். தீவிரவாதிகள்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் நகரை கைப்பற்றுவதில் ராணுவம்  தீவிரமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் குர்து படையினரின் ஆதரவுடன் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போர் கடுமையாக இருப்பதால் தாக்கு பிடிக்க முடியாமல் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் மொசூலின் பெரும்பாலான பகுதிகள் ஈராக் ராணுவம் வசம் வந்து விட்டது.

ஈராக்கின் மொசூல் நகருக்குத் தெற்கில் உள்ள வட்டாரத்திலிருந்துப் பின்வாங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்  19 எண்ணெய்க் கிணறுகளுக்குத் தீ வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மக்கள் பலர் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விலங்குகள் இறந்ததாகவும் தகவல்கள் கூறின. எரியும் எண்ணெய்க் கிணறுகளிலிருந்து வெளியாகும் புகையால் கால்நடைகள் கறுப்பு நிறமாகக் காட்சியளிப்பதாகக் கூறப்பட்டது. 

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...