சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டு 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தென்மேற்கு சீனாவின் லாய்சு நகரில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தினுள் 35 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதனால் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். வாசலுக்கு மிக அருகாமையில் இருந்த 2 பேர் மட்டும் உடனடியாக வெளியேறிவிட்டனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 15 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 18 தொழிலாளர்களைக் காணவில்லை. அவர்கள் சுரங்கத்தில் எந்த பகுதியில் சிக்கியிருக்கிறார்கள் என்று சுரங்க நிபுணர்கள் தேடி வருகிறார்கள். இந்த விபத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள அனைத்து சுரங்கங்களிலும் நிலக்கரி உற்பத்தியை நிறுத்தும்படி நகராட்சி உத்தரவிட்டுள்ளது.

உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் சீனாவில், நிலக்கரி சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 பேரும், மார்ச் மாதம் 19 பேரும் சுரங்க விபத்துகளில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...