அமெரிக்காவின் சிஐஏ-விடம் இந்தியர்களின் ஆதார் விவரங்கள் : உண்மையை உடைத்த விக்கிலீக்ஸ்.!

கடந்த வெள்ளிக்கிழமை, விக்கிலீக்ஸ் நம்பமுடியாத தகவலொன்றை வெளியிட்டது. அதாவது, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை (சிஐஏ) ஆனது ரகசியமாக இந்தியர்களின் ஆதார் தரவை அணுகுவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க மத்திய புலனாய்வு முகமையின் தொழில்நுட்ப வழங்குநரான கிராஸ் மேட்ச் டெக்னாலஜீஸ் மூலம் வடிவமைக்கப்பட்ட எக்ஸ்பிரஸ்லேன் (Expresslane) என்ற கருவியின் உதவியுடன் இந்த அணுகலை அமெரிக்க அரசாங்கம் பெறுவதாக விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது.

மென்பொருளில் நிபுணத்துவம்



கிராஸ் மெட்ரிக் டெக்னாலஜிஸ் என்பது பயோமெட்ரிக் மென்பொருளில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு அமெரிக்க-அடிப்படையிலான நிறுவனம். வெளியான விக்கிலீக்ஸ் அறிக்கையின் படி, ஆதார் திட்டத்திற்காக இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் மூலம் சான்றளிக்கப்பட்ட முதல் பயோமெட்ரிக் சாதனங்களில் இந்நிறுவன சாதனமும் ஒன்றாகும்.

பயோமெட்ரிக் சேகரிப்பு










விக்கிலீக்ஸ் பதிவேற்றிய ஆவணங்களானது, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையின் தொழில்நுட்ப சேவைகள் (ffice of Technical Services - OTS) அலுவலகத்தினுள், உலகெங்கிலும் உள்ள சேவைகளுடன் தொடர்புகொள்வதற்க்கான ஒரு பயோமெட்ரிக் சேகரிப்பு அமைப்பை கொண்டுள்ளதாக கூறுகிறது.

இரகசிய தகவல் சேகரிப்பு கருவி



"சிஐ-வின் ஒரு பிரிவான தொழில்நுட்ப சேவைகள் அலுவலகம், உலகம் முழுவதும் உள்ள தொடர்பு சேவைகளை அணுகுமொரு பயோமெட்ரிக் சேகரிப்பு முறைமையை (biometric collection system) கொண்டுள்ளது. இந்த 'தன்னார்வ பகிர்வு' வெளிப்படையாக சிஏஐ-வால் நிகழ்த்தப்படவில்லை. ஏனென்றால் எக்ஸ்பிரஸ்லேன் (ExpressLane) என்பது இரகசிய தகவல் சேகரிப்பு கருவியாகும். கான் மூலம் தகவல் சேகரிப்புகளை இரகசியமாக சிஐஏ பெறுகிறது" என்று விக்கிலீக்ஸ் வலைத்தள அறிக்கை தெரிவிக்கிறது.

ஒசாமா பின்லேடனை அடையாளம்







மேலும், "எக்ஸ்பிரஸ்லேன் கருவியின் முக்கிய கூறுகளானது, சட்ட அமலாக்கம் மற்றும் நுண்ணறிவு சமூகத்திற்கான பயோமெட்ரிக் மென்பொருளில் நிபுணத்துவம் கொண்ட அமெரிக்க நிறுவனமான கிராஸ் மேட்ச் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவம், ஒசாமா பின்லேடனை அடையாளம் கண்டு கொலை செய்தபோது இந்த நிறுவனத்தின் பெயர் செய்திகளில் அடிப்பட்டதும் என்பது குறிப்பிடத்தக்கது" என்றும் விக்கிலீக்ஸின் அறிக்கை கூறுகிறது.

ஒற்றர்கள் கைகளில் ஆதார்







முதலில் "இந்தியாவின் தேசிய அடையாள அட்டை தரவுத்தளம், சிஐஏ உளவாளிகளால் ஏற்கனவே திருடப்பட்டுவிட்டதா.?" என்ற கட்டுரையை இணைத்து ட்வீட் ஒன்று செய்தது, பின்னர் மற்றொரு ட்வீட்டில் "ஒற்றர்கள் கைகளில் ஆதார்" என்று ஒரு கட்டுரையையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது. அறிக்கைகள் படி, விக்கிலீக்ஸ் கூற்றுக்கள் அனைத்தையும் இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...