கோவையில் மனை வரன்முறைடுத்த இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

20.10.2016 முன்பு பதிவு செய்யப்பட்ட மனை மற்றும்‌ பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மூலம்‌ வரும்‌ 27.09.2023 மற்றும்‌ 04.10.2023 ஆகிய தினங்களில்‌ சிறப்பு முகாம்கள்‌ நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.


கோவை: பொது மக்கள்‌ தங்களின்‌ மனை ஆவணம்‌, வரைபடம்‌ மற்றும்‌ வங்கி கணக்கிலிருந்து விண்ணப்ப கட்டணமாக ரூ.500/- ஆன்லைனில்‌ செலுத்த உரிய கால கெடுவுக்குள்‌ விண்ணப்பத்தினை பதிவேற்றம்‌ செய்து பயனடையுமாறு கோவை மாநகராட்சி சார்பில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ அனுமதியற்ற மனை மற்றும்‌ மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு வீட்டு வசதி துறை மூலம்‌ 6 மாத காலங்களுக்கு 28.02.2024 வரை கால அவகாசம்‌ அளித்து ஆணை பிறப்பித்துள்ளது.

எனவே, பொது மக்கள்‌ 20.10.2016 முன்பு பதிவு செய்யப்பட்ட மனை மற்றும்‌ பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, கோயம்புத்தார்‌ மாநகராட்சி மூலம்‌ வரும்‌ 27.09.2023 மற்றும்‌ 04.10.2023 ஆகிய தினங்களில்‌ சிறப்பு முகாம்கள்‌ மண்டல அலுவலகங்களில்‌ நடத்த இருப்பதால்‌, அது சமயம்‌ பொது மக்கள்‌ தங்களின்‌ மனை ஆவணம்‌, வரைபடம்‌ மற்றும்‌ வங்கி கணக்கிலிருந்து விண்ணப்ப கட்டணமாக ரூ.500/- ஆன்லைனில்‌ செலுத்த உரிய கால கெடுவுக்குள்‌ விண்ணப்பத்தினை பதிவேற்றம்‌ செய்து பயனடையுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...