முதியோர் இல்லங்களை பதிவு செய்க..! - கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்கள், ஓய்வுகால முதியோர் இல்லங்கள், முதியோர் வளாகங்கள் உள்ளிட்டவற்றை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவையில் செயல்பட்டுவரும் முதியோர் இல்லங்கள், ஓய்வுகால முதியோர் இல்லங்கள், முதியோர் வளாகங்கள் உள்ளிட்டவற்றை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் பதிவுசெய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் சேவை நோக்கில் அல்லது வணிக நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் முதியோர் இல்லங்கள், ஓய்வுகாலமுதியோர் இல்லங்கள், முதியோர் வளாகங்கள், உதவிவாழும் இல்லங்கள், நோய் தடுப்பு பராமரிப்பு இல்லங்கள், நல்வாழ்வு பராமரிப்பு இல்லங்கள், இடைநிலைபராமரிப்பு இல்லங்கள், ஆகியவற்றை பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பாதுகாப்பு சட்டம்-2007- ன் கீழ் மாவட்ட சமூக நலத்துறையில் பதிவு செய்யவேண்டும்.

எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் பதிவு செய்யாமல் செயல்படுத்தப்பட்டு வரும் முதியோர் இல்லங்கள் ஓய்வுகாலமுதியோர் இல்லங்கள் முதியோர் வளாகங்கள் அனைத்தும் உரிய ஆவணங்களுடன் கோயம்புத்தூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் கருத்துரு சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...