கோவை ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம் - ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்

கோவையில் இருந்து நாளை (27-ந் தேதி) இரவு 7.45 மணிக்கு ராமேஸ்வரம் புறப்பட்டுச் செல்லும் வாராந்திர இரயில் எண்:16618, ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த இரயில் கோவையில் இருந்து ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.


கோவை: மோசமான வானிலை காரணமாக கோவை-ராமேஸ்வரம் இரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாம்பன் இரயில்வே பாலத்தில் இரயில்கள் செல்லும்போது, அதிக சப்தம் எழுவதால் அது குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த சில நாட்களாக அந்த பாதையில் இரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது.

மேலும், தற்பொழுது மோசமான வானிலை காரணமாக பாம்பன் ரெயில்வே பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, கோவையில் இருந்து நாளை (27-ந் தேதி) இரவு 7.45 மணிக்கு ராமேஸ்வரம் புறப்பட்டுச் செல்லும் வாராந்திர இரயில் எண்:16618, ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த இரயில் கோவையில் இருந்து ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து நாளை மறுநாள் (28-ந் தேதி) இரவு 7.10 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16617), ராமேஸ்வரத்துக்குப் பதில் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும். இந்த ரயில், ராமேஸ்வரம்-ராமநாதபுரம் இடையே இயக்கப்படாது. ராமநாதபுரத்தில் இருந்து இந்த இரயில் கோவை புறப்பட்டு வரும்.

இந்த இரயில்கள் குறித்த விவரங்களை ராமேஸ்வரத்தில் 93605 -48465 என்ற உதவி எண்ணிலும், மண்டபத்தில் 93605-44307 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு பயணிகள் தெரிந்துகொள்ளலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...