பீட்டா அமைப்பின் பூர்வா ஜோஸ்புராவின் உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு செய்து எரித்த மலைவாழ் மக்கள்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டில் மாடுகள் துன்புறுத்தபடுவதாக கூறி அமெரிக்காவை சேர்ந்த பீட்டா அமைப்பினர் தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த தடை உத்தரவு பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிகட்டுக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடைபெறும் என்றிருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனதினர் என மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. 



இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த ஆனைகட்டி ஆலமரமேடு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த தடையாக இருக்கும் பீட்டா அமைப்பின் தலைமை நிர்வாகி அதிகாரி பூர்வா ஜோஸ்புராவின் உருவ பொம்மைக்கி நெற்றியில் 1ரூபாய் நாணயம் திலகமிட்டும், செருப்பு மாலை அணிவித்து பாடையில் சுமந்து இறுதி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.



பட்டாசுகள் வெடித்தும் ஒப்பாரி வைத்தும் சுமந்து சென்றவர்கள் உருவ பொம்மை மீது கோக் குளிர்பானம் மற்றும் மண் எண்னெய் ஊற்றி உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிகட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பீட்டா அமைப்பு மீண்டும் தலையிட்டால் உருவ பொம்மையை எரித்தது போல பீட்டா அமைப்பின் தலைமை அதிகாரியையும் எரிப்போம் என ஆக்ரோஷத்துடன் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...