ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பின் கொடும்பாவியை செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்திய கோவை மக்கள்


ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் பீட்டா அமைப்பை கண்டித்து கோவை திருமலையாம்பாளையம் பகுதி பொதுமக்கள் பீட்டா அமைப்பின் கொடும்பாவியை செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.



ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும். பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.



இந்நிலையில், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி கோவை திருமலையாம்பாளைய பொதுமக்கள் பீட்டா அமைப்பின் கொடும்பாவியை பாடையில் எடுத்து சென்று செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உடனடியாக ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் அல்லது முதல்வர் பன்னீர் செல்வம் பதவி விலக வேண்டும் என கோசங்களை எழுப்பினர்.





சட்டக்கல்லூரி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மத்திய தொலைத்தொடர்பு அலுவலகத்திற்குள் புகுந்து பீட்டாவை தடை செய்யவும், மத்திய மாநில அரசுகள் அவசர சட்டத்தை கொண்டு வர வலியுறுத்திம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரைமணி நேரம் போராட்டம் நடைபெற்றதால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.

கோவை தொப்பம்பட்டி மற்றும் சின்னத்தடாகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பீட்டா அமைப்பை தடை செய்யவும், ஜல்லிகட்டிற்கு உடனே அரசு ஆணை வழங்கவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் உண்ணாவிரதமிருந்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...