கோவை ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி - மும்பை ரயிலை மறித்து சட்டகல்லூரி மாணவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.


ஜல்லிகட்டு விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத  மத்திய அரசை கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி - மும்பை ரயிலை மறித்து  சட்டகல்லூரி மாணவர்கள்  போரட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிகட்டு போட்டி நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி  கோவையில் அனைத்து கல்லூரிகளை  சேர்ந்த மாணவர்களும் , இளைஞர்களும் மூன்றாவது நாளாக வ.உ.சி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் வ.உ.சி மைதானத்திற்கு சென்று கலந்து கொண்டனர். 

பின்னர் 50க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் வ.உ.சி மைதானத்தில் இருந்து ஊர்வலமாக சென்று கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.  கோவை ரயில் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் , ரயில் நிலையத்திற்குள் சென்று கன்னியாகுமரி - மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது மத்திய அரசு ஜல்லிகட்டு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும் , பீட்டா அமைப்பினை  கொண்டு வந்ததே பா.ஜ.க அரசுதான் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். 

காவிரி விவகாரத்தில் ஓரு நிலைப்பாடும், ஜல்லிகட்டு விவகாரத்தில் ஓரு நிலைப்படும் எடுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், மக்கள் விழித்துக்கொண்டார்கள் எனவும் ஜல்லிகட்டுக்கு அனுமதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்களை சமரசப்படுத்திய காவல் துறையினர் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அனுப்பி வைத்தனர். சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் காரணமாக ரயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Newsletter

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...