விற்பனையாளர் நுகர்வோர் இருவரும் பயனடையும் வகையில் கோவையில் "பெர்க்ஸ்4 லாயல்டி" துவக்கம்

விற்பனையாளர்களும், பொருட்களை வாங்கும் நுகர்வோர்களும் என இருவரும் பயனடையும் வகையில் குரு குழந்தைவேல் மற்றும் வஞ்சிநாயகி ஆகியோர் இணைந்து கோவை மாவட்டத்தில் "பெர்க்ஸ்4 லாயல்டி" என்னும் துணை மார்க்கெட்டிங் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.



இந்த இணையதள வர்த்தக விற்பனையகம் மூலம் பிளிப்கார்ட், ஸ்நேப்டீல், மைந்தரா மற்றும் நூற்றுக்கணக்கான கம்பெனிகளின் இணையதள வர்த்தக தளங்களில் சென்று பொருட்கள் வாங்கினால் வாங்குபவர்களுக்கு 3 முதல் 12 சதவிகிதம் வரை சேமிப்பாகும்.

அதாவது, பெர்க்ஸ்4 நிறுவனம் மற்ற இணையதள விற்பனை நிறுவங்களுக்கு ஆர்டர் வாங்கித் தருவதால் அந்த நிறுவங்கள் பெர்க்ஸ் 4 லாயல்டிக்கு கொடுக்கும் கமிஷனில் பெரும் பகுதி நுகர்வோர்களுக்கு வழங்கப்படுகிறது.

www.perks4.in அல்லது மாணவர்களுக்கான மற்றும் ஊழியர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஒரு இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கென கட்டணம் எதுவும் இல்லை. பின் ஒவ்வொரு முறையும் எந்தப்பொருள் இம்முகவரியில் வாங்க விரும்பினாலும் பெர்க்ஸ்4 இணையபக்கத்தில் முதலில் நுழைந்து பின் அந்தந்த விற்பனை தளங்களுக்கு செல்ல வேண்டும். அதன் பின் அந்த இணையப்பக்கத்தில் இருக்கும் பொருளை வாங்கிக் கொள்ளலாம்.

இப்படி வாங்கினால் சுமாராக 3 முதல் 12 சதவிகிதம் வரை தொகையில் தள்ளுபடி கிடைக்கும். மேலும், பல விற்பனை நிலையங்கள் தங்கள் ஊழியர்கள் பயனடைய விரும்பினால் பெர்க்ஸ்4-ஐ அணுகலாம். அந்நிறுவனங்களுக்கு அதன் பெயரிலேயே இணையதளபக்கம் இலவசமாக அமைத்துக்கொடுக்கப்படும்.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குரு குழந்தைவேல் கூறுகையில், கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் இதுவாகும். நாங்கள் இந்நிறுவனத்தை சுமார் 1 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கியுள்ளோம். எங்களது இணையதளம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இயங்கத் துவங்கியது. இந்த இணையதளத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்க்கும் இடையே இருக்கும் தூரத்தைக் குறைக்க முடியும்.

தற்போதைய நிலையில் 800 இணையதள வர்த்தகர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் வர்த்தகர்களிடமும், உணவு விடுதி நிறுவனத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் உள்ளூர் சந்தையிலும் இத்திட்டத்தின் பயன்களை அனுபவிக்க முடியும்" என்றார்.

இந்நிகழ்வுகளின் போது சிஎஸ்ஓ கே.தங்கராஜ், துணை மேலாளர், இயக்குநர் வாஞ்சி ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...