மவுன மொழியோடு போராடலாம்: கோவையில் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேட்டி



கோவையில் நடைப்பெற்று வரும்  ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தில் ஹிப்ஹாப்  ஆதி கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். 



இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய மாநில அரசுகள் தமிழக மக்களின்  நியாயமான கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். இன்று கோவையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெறும். இங்கு அமர்ந்துள்ள மாணவர்கள் அனைவரும் மவுன மொழியில் ஜல்லிக்கட்டுக்கான தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.





அரசியல்வாதிகளைப் போல் மாணவர்கள் விரக்தியடைந்து கலவரங்களில் ஈடுபடாமல் அமைதியான முறையில் வாயில் கருப்புத் துணி கட்டி மவுனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது. 

தமிழகம் முழுவதும் மாணவர்களால் நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்தில் நேற்று சில பகுதிகளில் காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது வருத்தமளிக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்தில் அரசு கவனம் செலுத்தி உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

நமது கலாச்சாரத்தை காக்க இளைஞர்கள் இணைந்து நடத்தி வரும் இப்போராட்டத்தை முடக்காமல் அரசு நிர்வாகமும், காவல் துறையினரும் தீர்வுக்கான வழிகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு விளையாட்டு காளைகளை கொடுமைபடுத்துவதாக உள்ளது என சிலர் நினைப்பது தவறானது. தேசிய ஊடகங்கள் இதுகுறித்தான உண்மை விழிப்புணர்வை அனைவருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும்.

நடைமுறைக்கு சாத்தியமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் நடத்தப்பட்டு வரும் இப்போராட்டம் வெற்றிபெற வேண்டும். இப்போராட்டம் இவ்வளவு அமைதியான முறையில் எவ்வித சேதமும் இன்றி நடைபெறுகிறது என்றால் அதற்கு மாணவர்களே காரணம். மாணவர்களின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும், எம் என் சி போன்ற நிறுவனங்களும் ஜல்லிக்கட்டிற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்களை அடக்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நிறுவனத்தினர் இப்போராட்டத்தை கவனித்து கலாச்சாரத்தை காக்க இணைந்து போராட முன்வர வேண்டும்" என்றார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...