இந்தியாவில் தயாரிக்கபட்ட இலகு ரக விமானம் சூலூர் விமான படை தளத்தில் இணைக்கபடும் என விமான படை அதிகாரி தகவல்


இந்தியாவில் தயாரிக்கபட்ட தேஜாஸ் இலகு ரக விமானம் 2018-ல் சூலூர் விமான படை தளத்தில் இணைக்கப்படும்  என விமான படை அதிகாரி சுனில்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.



குடியரசு தினத்தின் ஒரு பகுதியாக சூலூர் படை தளத்தில் விமான படை செயல்பாடுகள் குறித்த கண்காட்சி மற்றும் செயல் விளக்கம் இன்று நடைபெற்றது.

தற்போது விமான சேவையில் உள்ள இந்தியாவில் 2003-ல் தயாரிக்கபட்ட நவீன இலகு ரக எம்.கே-1 ஹெலிகாப்டர், இங்கலாந்தில் 1964ல் தயாரிக்கபட்ட ஆரோ-748 விமானம், மணிக்கு 540 கி.மீட்டர் வேகத்தில் பொருட்களை ஏற்றி செல்லுதல், பயிற்சி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயணத்திற்கு உபயோகிக்கப்படும்  ஆண்டநோவ்-32 விமானம் மற்றும் ரஷ்யாவில் உருவாக்கபட்ட எம்.ஐ-17வி-5 ஆகியன கண்காட்சியில் இடம் பெற்றன.

மேலும், போர் மற்றும் கலவர காலங்களில் வீரர்கள் உபயோகிக்கும் ராப்ளிங் கயிறு, விளக்குகள், பாதுகாப்பு கவசங்கள் மற்றும் கூடாரங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.





இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக தீவிரவாத தாக்குதலின் போது விமான படை வீரர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பது குறித்த ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் இறங்கி தாக்குதல் நடத்தும் செயல் விளக்கம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதுகுறித்து சூலூர் விமான படை தள அதிகாரி ஏர் கமோடர் சுனில்குமார் கூறும்போது, சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்திய விமான படை செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கிலும் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக கூறினார்.

மேலும், இந்த கண்காட்சியில் 7000-கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கபடுவதாக கூறியவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் இலகு ரக விமானம் 2018-ல் சூலூர் விமான படை தளத்தில் இணைக்கபடும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...